கோவில் மண்டபம்.
ஆன்மீகச் சொற்பொழிவு
ஆற்றிக் கொண்டிருந்தார்
மெய்யில் காவியும்
கையில் கமண்டலமும் தரித்த
சாமியார் ஒருவர்!
அசையாத சுவர்களுக்கு மத்தியில்
அசையும் சுவர்களாய்
அமர்ந்திருந்தனர் பக்தர்கள்....
ஒலிப்பெருக்கி
அவர் குரலை
ஆனமட்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது!
சொற்பொழிவு
நற்பொழிவாய்
நடந்துகொண்டிருந்தது...
சாமியார் சொன்னார்:-
"உலகம்
ஒரு நாடக மேடை
நாமெல்லாம்
அதன்
அங்கங்கள்
இறைவன்
இயக்குகிறான்
அவன்
நம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு பாத்திரம் தந்திருக்கிறான்..."
அப்போது
அந்தக் கோவில் வாசலில்
படுத்திருந்த
பிச்சைக்காரன் ஒருவன்
சோகம் இழைந்த
சிரிப்போடு
சொல்லிக்கொண்டான்:-
ஆம்,
உண்மைதான்!
எனக்கும்
ஒரு
பாத்திரத்தைத் தந்திருக்கிறானே!
"திருவோடு".
--------ரௌத்திரன்
ஆன்மீகச் சொற்பொழிவு
ஆற்றிக் கொண்டிருந்தார்
மெய்யில் காவியும்
கையில் கமண்டலமும் தரித்த
சாமியார் ஒருவர்!
அசையாத சுவர்களுக்கு மத்தியில்
அசையும் சுவர்களாய்
அமர்ந்திருந்தனர் பக்தர்கள்....
ஒலிப்பெருக்கி
அவர் குரலை
ஆனமட்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது!
சொற்பொழிவு
நற்பொழிவாய்
நடந்துகொண்டிருந்தது...
சாமியார் சொன்னார்:-
"உலகம்
ஒரு நாடக மேடை
நாமெல்லாம்
அதன்
அங்கங்கள்
இறைவன்
இயக்குகிறான்
அவன்
நம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு பாத்திரம் தந்திருக்கிறான்..."
அப்போது
அந்தக் கோவில் வாசலில்
படுத்திருந்த
பிச்சைக்காரன் ஒருவன்
சோகம் இழைந்த
சிரிப்போடு
சொல்லிக்கொண்டான்:-
ஆம்,
உண்மைதான்!
எனக்கும்
ஒரு
பாத்திரத்தைத் தந்திருக்கிறானே!
"திருவோடு".
--------ரௌத்திரன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.