ஆசை உன்மீது
அணுவளவு குறைந்தாலும்
ஓசை இல்லாமல்-என்
உயிர்பிரிய வேண்டுமடி!
ஒருசொட்டுக் கண்ணீர்
உன்கண்ணில் வழிந்தாலும்
மறுசொட்டுக் கண்ணீர்-என்
பிணத்தில்விழ வேண்டுமடி!
என்மார்பில் நீசாய
உன்மார்பில் நான்சாய
இருநெஞ்சின் துயரங்கள்
இடம்மாற வேண்டுமடி!
நாதமணிக் கொலுசோடு
நடமாடும் நடமாடும்-உன்
பாதமலர் நானெடுத்து
முத்தமிட வேண்டுமடி!
இலைக்குக் காம்பெனவே
இளைத்திருக்கும் மெல்லிடையை
வளைத்து முப்போதும்-நான்
விளையாட வேண்டுமடி!
மொட்டு இதழ்குடித்து
முரலும் வண்டினைப்போல்-உன்
பட்டு இதழ்குடித்து-நான்
பசியாற வேண்டுமடி!
என்கையில் உன்ரேகை
உன்கையில் என்ரேகை
இடம்மாற மஞ்சத்தில்-நாம்
இளைப்பாற வேண்டுமடி!
என்னிதயம் மோகத்தில்
எரிகின்ற நேரத்தில்-உன்
இதழெச்சில் தனையூற்றி
நீயணைக்க வேண்டுமடி!
கட்டி அணைத்தெடுத்துக்
கலவி முடிக்கையில்-நாம்
தொட்டுக்கொண்ட இடமெல்லாம்
தேனூற வேண்டுமடி!
முப்போதும் உன்மார்பில்
முத்தமிடும் பொன்தாலி
சிலபோது சிலபோது
நானாக வேண்டுமடி!
தாயூட்டும் ஒர்சுகம்
தாயோடு முடியாமல்
நீயூட்டும் வேளையிலும்
நீண்டுவர வேண்டுமடி!
கண்ணீர் வந்தாலும்
காமம் வந்தாலும்
பெண்ணிற் பேரழகே-உன்
முந்தானை வேண்டுமடி!
வயதாகிப் போனாலும்
வண்ணத் திருமயிலே!-உன்
வாயூறும் எச்சிலுக்கு
நான்வழிய வேண்டுமடி!
யார்செத்து யார்அழுக?-என்ற
கேள்விக்கு இடம்வேண்டாம்
ஊர்அழுக ஒன்றாக-அடி
நாம்போக வேண்டுமடி!
-----------ரௌத்திரன்
அணுவளவு குறைந்தாலும்
ஓசை இல்லாமல்-என்
உயிர்பிரிய வேண்டுமடி!
ஒருசொட்டுக் கண்ணீர்
உன்கண்ணில் வழிந்தாலும்
மறுசொட்டுக் கண்ணீர்-என்
பிணத்தில்விழ வேண்டுமடி!
என்மார்பில் நீசாய
உன்மார்பில் நான்சாய
இருநெஞ்சின் துயரங்கள்
இடம்மாற வேண்டுமடி!
நாதமணிக் கொலுசோடு
நடமாடும் நடமாடும்-உன்
பாதமலர் நானெடுத்து
முத்தமிட வேண்டுமடி!
இலைக்குக் காம்பெனவே
இளைத்திருக்கும் மெல்லிடையை
வளைத்து முப்போதும்-நான்
விளையாட வேண்டுமடி!
மொட்டு இதழ்குடித்து
முரலும் வண்டினைப்போல்-உன்
பட்டு இதழ்குடித்து-நான்
பசியாற வேண்டுமடி!
என்கையில் உன்ரேகை
உன்கையில் என்ரேகை
இடம்மாற மஞ்சத்தில்-நாம்
இளைப்பாற வேண்டுமடி!
என்னிதயம் மோகத்தில்
எரிகின்ற நேரத்தில்-உன்
இதழெச்சில் தனையூற்றி
நீயணைக்க வேண்டுமடி!
கட்டி அணைத்தெடுத்துக்
கலவி முடிக்கையில்-நாம்
தொட்டுக்கொண்ட இடமெல்லாம்
தேனூற வேண்டுமடி!
முப்போதும் உன்மார்பில்
முத்தமிடும் பொன்தாலி
சிலபோது சிலபோது
நானாக வேண்டுமடி!
தாயூட்டும் ஒர்சுகம்
தாயோடு முடியாமல்
நீயூட்டும் வேளையிலும்
நீண்டுவர வேண்டுமடி!
கண்ணீர் வந்தாலும்
காமம் வந்தாலும்
பெண்ணிற் பேரழகே-உன்
முந்தானை வேண்டுமடி!
வயதாகிப் போனாலும்
வண்ணத் திருமயிலே!-உன்
வாயூறும் எச்சிலுக்கு
நான்வழிய வேண்டுமடி!
யார்செத்து யார்அழுக?-என்ற
கேள்விக்கு இடம்வேண்டாம்
ஊர்அழுக ஒன்றாக-அடி
நாம்போக வேண்டுமடி!
-----------ரௌத்திரன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.